Saturday, 24 May 2014

தேசியத்தலைவர் எப்போதும் தமது மக்களின் விடுதலையையும் , சுபீட்ச்ச வாழ்வையுமே நினைத்தார்


தேசியத்தலைவர் அவர்கள் எப்போதும் 
தமது மக்களின் விடுதலையையும் ,சுபீட்ச்ச வாழ்வையுமே   
நினைத்தார்.வரலாறுகளில் புனைவுகள் 
வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக 
இருந்தார்.தொண்ணூறுகளின் நடுப்பகுதிகளுக்குப்பின் 
நிதர்சனம் நிறுவனம் தம் வரலாறை எழுத 
விரும்பிற்று.அரசியல் துறை பொறுப்பாளர்

அவர்கள் தலைவரிடம் கேட்டார் :முன்பு 
அந்நிறுவனத்திற்கு பொறுப்பாக இருந்தவர் 
இயக்கத்தில் இருந்து ஏற்கனவே விலத்தி 
இருந்தார்.அவரது பெயரை இணைக்கலாமா?
என்பதே கேள்வி.தலைவர் உடனே சொன்னார் 
அப்ப நீங்கள் பொய்யோ எழுதப்போறிங்கள்?
அரசியல் பொறுப்பாளர் உடன் தலைவரின் 
எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.     
தலைவர் அவர்கள் 2007 ஆம் ஆண்டில் ஒருநாள் 
எங்களுடன் கதைத்துக்கொண்டு இருக்கும் போது
ஜெயசுக்குறு கதை வந்தது அந்த சண்டையை 
அவன் நன்றாக வழி நடத்தினான் என்றார்.
அந்த அவன் அப்போதுஇயக்க வரலாற்றில் பெரும் 
துரோகி ஆகியிருந்தான்.தலைவர் எப்போதும் 
உண்மையாக இருந்தார்.
துரோகி கருணா மீதான நடவடிக்கையின் போது 
ஒரு மருத்துவ அணியே செல்ல ஒழுங்குபடுத்தப்பட்டது.
தலைவர் அவர்கள் தலையிட்டு இரு மருத்துவ 
அணிகள் செல்லுமாறு கட்டளையிட்டார்.இரு 
பகுதியும் எங்களின் போராளிகள் ,எந்தப் பாகுபாடும் 
இருக்கக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார்.
வழமைக்கு மாறாய் மிகத்துயரோடே எம்மை 
வழி அனுப்பினார். 
-நிரோன் -

0 comments:

Post a Comment

 

தமிழீழக் குறும்படங்கள்

வெல்லும்வரை …

தமிழீழ போராட்ட வரலாறு

தலைவர் அவர்களின் உரையிலிருந்து

தமிழீழ பாடல்கள்

சுட்டும் விரலால் சுட்டி