Saturday, 24 May 2014

என்னவள் கமரா விழிகள் சங்கமித்த புள்ளிகள்




ஒரு அநாதையின் விமான பயணம்


அவனுக்கு ஐம்பது வயதிற்கு கிட்ட இருக்கும்.
அவன் அவனது முன்னைய நிறையிலிருந்து ஒரு 
இருபது கிலோவாவது குறைந்திருப்பான்.அவன் இப்போது 
கட்டுநாயக்காவில் விமானத்தில் ஏறிவிட்டான்.அவனுக்கும் 
தான் கொலை வளையத்தில் இருந்து தப்பியதான உணர்வு 
வருகிறது.விமானம் புறப்பட அவனது கண்களும் குளமாயிற்று.

வெற்றிடம் நிரப்ப காற்று வரும்


நண்பா!
நீ இல்லை 
இருந்தும் 
கடிதம் எழுதுகிறேன் 
தமீழீழம் எங்கும் 
எம் சுவாசம் இருந்திருக்கிறது 
இன்று எங்கும் ஆக்கிரமிப்பு 
நண்பா !

என்னவளுக்கு !

என்னவளுக்கு !
இன்று 
தொழிலாளர் /உழைப்பாளர் தினம் 
இன்றுதான் 
உன் பிறந்த தினமும் 
"எட்டு மணி நேர வேலை "என்று
தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது 
என்னவளே !

இலங்கையில் சிங்களம் செய்தது போர்க்குற்றம் மட்டும்தானா?


போர் சட்ட விதி முறைகளுக்குள் உட்பட்டது. 
இவ்விதி முறைகளை தாண்டி போரில் திட்டமிட்டு 
செய்யப்படும் குற்றங்கள் போர் குற்றங்கள் ஆகும் .
இலங்கையில் நடந்தது போர்க்குற்றம் மட்டுமல்ல.
போர் விமானங்களாலும்,எறிகனையாலும் ,ஆழ 
ஊடுருவும் படையணியாலும் திட்டமிட்டு 

ஆழ ஊடுருவும் அணி இன்னுமொரு போர்க்குற்ற சாட்சி


ஆழ ஊடுருவும் அணி 
சிறிலங்காவின் 
இன்னுமொரு 
போர்க்குற்ற சாட்சி 
ஆழ ஊடுருவும் அணியால் 
நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் 
கொல்லப்பட்டுள்ளார்கள் 
குறிப்பாக மருத்துவ வாகனங்கள் 
அவர்களால் குறிவைக்கப்பட்டன.

ஈழம் எப்படி இருக்கிறது?


இலங்கை சுதந்திரம் அடைந்ததாய் 
கருதப்படும் 1948ஆம் ஆண்டிலேயே சிங்கள ஆட்சி 
குடிமைச்சட்டத்தை அறிமுகப்படுத்தி அரைவாசி 
மலையகத்தமிழரை அவர்களது விருப்பத்திற்கு 
மாறாய் இந்தியாவிற்கு நாடு கடத்திற்று.பத்து 
வருடம் ஆகமுன்பே தனிச்சிங்கள சட்டத்தை 

தேசியத்தலைவர் எப்போதும் தமது மக்களின் விடுதலையையும் , சுபீட்ச்ச வாழ்வையுமே நினைத்தார்


தேசியத்தலைவர் அவர்கள் எப்போதும் 
தமது மக்களின் விடுதலையையும் ,சுபீட்ச்ச வாழ்வையுமே   
நினைத்தார்.வரலாறுகளில் புனைவுகள் 
வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக 
இருந்தார்.தொண்ணூறுகளின் நடுப்பகுதிகளுக்குப்பின் 
நிதர்சனம் நிறுவனம் தம் வரலாறை எழுத 
விரும்பிற்று.அரசியல் துறை பொறுப்பாளர்

முள்ளிவாய்க்கால் கவிதைகள்


முள்ளிவாய்க்கால் ஓரத்திலே 
விடிவு முடிவான காலத்திலே
அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் 
முதுமையான பசுமை நினைவை  
சுமக்கும் வாய்க்கால் 
இப்போது பயங்கரமாய் 
இரத்தம் கலந்த சிவப்பாய் 
மனிதரை அல்ல 

செயலில் வாழ்ந்த வீரன் நீ


சகோதரனே !
இன்று 
உன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் 
ஒன்றாய் வளர்ந்தோம் 
ஓரணியில் விளையாடினோம் 
கால அழைப்பை ஏற்று 
இன விடுதலைக்காய் உழைத்தோம் 
உனக்கும் எனக்கும்

ஒரு இனத்தின் அழிவு உலகக்கண்ணுக்கு முன்னால் நடக்கிறதே!


ன்று யாழ்ப்பாணத்தில் குறைந்தது இருவருக்கு 
ஒருஅரச பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். 
வன்னியில் குறைந்தது ஒருவருக்கு ஒரு அரச படை 
நிறுத்தப்பட்டுள்ளது.வன்னியில் பிறக்கும் ஒவ்வொரு 
பிள்ளையை நோக்கியும் குறைந்தது ஒரு துப்பாக்கி 
நீட்டப்படுகிறது.கிழக்கின் நிலைமையிலும் எந்த 
மாற்றங்களும் இல்லை.

இலங்கையின் இனவரலாறு


இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கரும்,நாகரும்தான். அவர்கள் இந்து சமயத்தையே பின்பற்றிவந்துள்ளனர். புத்தபகவானின் இயற்பெயர் சித்தாத்தன் .அவரது தந்தையின் பெயர் சுத்தோதணன் .இவர் ஒரு 
இந்து சமயத்தவரும்,அரசரும் ஆவார். கி.மு 560 ஆவது ஆண்டில் நேபாளத்தில் பிறந்த சித்தாத்தன் தனது 29 ஆவது வயதில்துறவியாகி புத்த சமயத்தை உருவாக்கினார்.

அந்த தாயிற்கு மூத்த மகன் இறந்தது தெரியாது.




அந்த அம்மாவிற்கு மூன்று ஆண்பிள்ளைகள் .
அந்த செழிப்பான செம்மண்ணில் அவர்களது 
வாழ்வு எவ்வளவு அழகாக இருந்தது.மூன்று 
பேருமே விளையாட்டில் வீரர்கள்.அவர்களது 
வீட்டில் கேடயங்களுக்கு குறைவிருக்காது.

விடுதலைக்கு உண்மையாய் உழைத்தார்கள்


இலங்கையில் இனக்கலவரம் நடைபெறவில்லை.
ஒரு இனத்தை ஒரு இனம் படுகொலைதான் செய்தது.
அரசால் திட்டமிடப்பட்டு நாடாத்தப்பட்ட 1983ஆம் ஆண்டுஇனப்படுகொலையின் பின் உணர்வு உள்ள எல்லா தமிழ் இளைஞரும் ஏதோ ஒரு போராட்ட  இயக்கத்துடன் இணைந்தார்கள்.அவனும் 1984இல்தனது எட்டாம் வகுப்பில் ஒரு இயக்கத்துடன் இணைந்துகொண்டான். அவனது இயக்கப்பெயர் துளசி .

தாய் நிலத்தில் இப்போது என்ன நடக்கிறது


தாய் நிலத்தில் இப்போது என்ன நடக்கிறது.சிங்கள அரசு 
சிங்கள குடியேற்றத்தை முன்பைவிட வேகமாய் செய்கிறது.
குறிப்பாக முல்லை மாவட்டம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
முல்லை மாவட்டத்தில் வசிக்கும் முல்லை பாராளமன்ற 
உறுப்பினர் எவரும் இப்போது இல்லை.இது சிங்களத்திற்கு 
வசதியாய் அமைந்து விட்டது.அரசினதும்,ஆளுனரதும் ,
முஸ்லீம் அமைச்சர் ஒருவரினதும் எடுபிடிகளாய் சில 
அரச உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு துணை போகிறார்கள்.

எங்கள் ஒப்பற்ற தலைவன்



தலைவர் பிரபாகரன் நடைமுறை சாத்தியமான ஒரு உண்மை மனிதன் .அவரைப்பற்றி எழுத எனக்கு எந்த தகுதியும் இல்லைத்தான் இருந்தும் 
அவரை வேண்டுமென்றே பிழையாக எழுதுபவர்க்காய் இதை பகிர 
வேண்டியிருக்கிறது.  தலைவர் இன மத மொழி சாதி பேதம் அற்றவர் .(அவர் நம்பியிருந்த பொறுப்பாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள் .அரசியல் துறைப்பொறுப்பாளரின்  துணைவியார் சிங்கள இனத்தை சேர்ந்தவர்.

முஸ்லீம் மக்கள்


தமிழ்பேசும் முஸ்லீம் இளைஞர்கள் விடுதலைப்போராட்டத்தின் 
( 80 களில்) ஆரம்ப காலங்களில் போராளிகளாக விடுதலைக்கு 
உழைத்தார்கள் . சிலர் மாவீரர்களாய் எங்களுள் வாழ்கிறார்கள்.
அன்று யாழ் நகரில் வாழ்ந்த பலருக்கு கப்டன் பாரத்தை தெரிந்திருக்கும்.
அவன் யாழ் கோட்டையில் ஆக்கிரமித்திருந்த இராணுவத்துடனான 
மோதலில் வீரச்சாவு அடைந்திருந்தான்.

உயிர்கள் பெறுமதியானவை


விடுதலைப்புலிகளின் தலைமை தனது இனத்தின் விடுதலை 
என்ற குறிக்கோளின் அச்சில் எப்போதும் சுழன்று கொண்டிருந்தது.
எந்த நாடுகளின் பின்னணியிலும் அது தங்கி இருக்கவில்லை.ஆனால் பல 
இயக்கங்கள் உருவாக வேறு நாடுகள் தமது நலனுக்காய் பின்னணியில் இருந்தன.இது எமது பலத்தை சிதறப்பண்ணியது.

நன்கு பழகிய மனிதரில் எண்பது வீதம் மனிதர் இறந்துவிட்டனர்.


அவனது சின்ன வயது வாழ்க்கை என்ன அழகானது.பிற்காலம் இவ்வளவு
கடினமாய் இருக்கும் என்று அப்போது அவன் துளியும் எண்ணியதில்லை.
பாடசாலை வாழ்க்கையுடன் இனவிடுதலையின் அவசியமும்
பொறுப்பும் நெருப்பாய் பற்றிக்கொண்டது.மூதாதையர்கள்
விடுதலையை பெற்றுத்தந்திருந்தால் அவனினதும் அவன்
போன்றவரின் வாழ்வும் இனிமையாய் தொடர்ந்திருக்கும்.
இயக்க வாழ்வு மிகக்கடினமானது.

அமைதி தேவைப்படும் நேரமெல்லாம் துயிலுமில்லம் போவோம்




விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்தது. இராணுவ
கட்டுப்பாட்டு பிரதேசத்திக்குள் இருந்து வி.பு. பிரதேசத்திற்குள்
போனதும் உடம்பில புது இரத்தம்  ஊறும் .அந்த நாள் இனி வருமா?
மனம் ஏங்கிச் சாகிறது.தமிழரின்  நிர்வாகம் .வேகமானியுடன் காவல்துறை 
ஒளிச்சு நிக்கும் .பிடிபட்டால் fine தான் தப்ப ஏலாது.வன்னியிக்க 
எங்க போனாலும் மனசு நிறையும்.பாண்டியன் ஐஸ் கிரீம் வேறு எங்கயும் 
குடிக்கமுடியாது.சேரன் ரோல்ஸ் எழுதவே வாயூறுது . சேன்ட நாசிகூறி 
சொல்லி வேலையில்லை பிரைட் ரைஸ்,சூப் என்றால் இளம்தென்றல்தான் .

உண்மைக் கதை - 07


கணவன் ,மனைவி ஒரே தொழிலில் இருப்பது அருமை.சிலர் மருத்துவராக
இருந்திருக்கிறார்கள்.ஆசிரியராக இருந்திருக்கிறார்கள் .படைப்பாளிகளாக
இருந்திருக்கிறார்கள்.ஏன் வலைப்பதிவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஈழத்தில் போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.ஒருபடிமேல் போய்
மாவீரர்களாக இருக்கிறார்கள்.


விடுதலையை உயிராய் நேசித்த புனிதன்




எளிமையில் என்றும் வாழ்ந்தாய் 
கருணையை இதயத்தில் சுமந்தாய் 
மாவீரர் நினைவில் சதா மூழ்குவாய் 
இலட்ச்சியத்தில் இளகாய்   
வீரனுக்கு உன்னைவிட யார் இவ்வுலகில் உண்டு 
தலைவனாய் இருந்தும் இறுதிவரை 
தலையணை அற்றே படுத்துறங்குவாய்
அர்ப்பணிப்பின் ஆணிவேர் நீதான் 
பலவீனம் அற்ற மனிதன் 
விடுதலையை உயிராய் நேசித்த புனிதன் 
 

தமிழீழக் குறும்படங்கள்

வெல்லும்வரை …

தமிழீழ போராட்ட வரலாறு

தலைவர் அவர்களின் உரையிலிருந்து

தமிழீழ பாடல்கள்

சுட்டும் விரலால் சுட்டி