Thursday, 22 May 2014

மறக்கப்பட்ட சுமைதாங்கிகள்


இது 1995,1996 காலப்பகுதி வன்னி மண்ணின் சனத்தொகை திடீரென
நான்கு மடங்குகளால் அதிகரித்தது. தங்குமிடம்,நோய் ,உணவு என
பெரும் சவால்களை விடுதலைப்புலிகள் இராணுவ நெருக்குவாரத்துடன்
சேர்த்து எதிர் கொண்டனர்.மலேரியாவாலும்,செப்ற்றிசீமியாவாலும்
அதிக உயிர்கள் போயிற்று .சிறுவர்களுக்கும் தாய்மார்களுக்கும்
பெரிய அளவில் போசாக்கு குறைபாடு தோன்றிற்று.


சிறுவர் பட்டினிச்சாவு திட்டம் ஊடாக பலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு
ஓரளவு முழுமையாக வெற்றிகொள்ளப்பட்டது.சிறிலங்கா அரசின்
பொருளாதார தடையை உடைக்க , மக்களின் சுகாதார நலன்களை
மேம்படுத்த,மாணவர்களின் கல்வியினை உயர்த்த மிகக்குறைந்த
ஆளணியினர் தொண்டர்களுடன் இணைந்து தொடர் இடப்பெயர்வுகளுடன் மிகப்பெரும்
பங்காற்றினார்.மக்கள் ஓரளவு நிமிர்ந்தனர்.சமாதானமும்
வந்தது.வன்னியை யாவரும் பிரமிப்புடன் பார்த்தனர்.
உழைத்தவர்களை, அந்த உழைப்பை விடுதலைப்புலிகள்
மாத்திரமே அறிவர்.விடுதலைப்புலிகளின் இராணுவ
வெற்றிகளுடன் இந்தவெற்றியும் கலந்திருந்தது.உழைத்தவர்களில்
பலர் இப்போது நம்மோடு இல்லை என்ற கவலையுடன்
அவர்களது உழைப்பும் நினைவுகூறப்படாதது காலத்தின்
கொடுமையாகிறது.

                                                         -சுருதி-

0 comments:

Post a Comment

 

தமிழீழக் குறும்படங்கள்

வெல்லும்வரை …

தமிழீழ போராட்ட வரலாறு

தலைவர் அவர்களின் உரையிலிருந்து

தமிழீழ பாடல்கள்

சுட்டும் விரலால் சுட்டி